தஞ்சாவூர், ஜூன் 3- தஞ்சாவூர் ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை குறுவை சாகுபடி முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக வேளாண் அலுவலர்கள், விவசாய பிரதிநிதிகளுடன் வேளாண் துறை இயக்குநர் க.தெட்சிணாமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி 1.08 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 35 ஆயிரம் ஏக்கர் நடவு பணிகள் முடிந்துள்ளது. அதே போல் டெல்டா மாவட்டங்களில் 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யவும், அதன் மூலம் 5 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்திக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணி நடைபெறுகி றது. விவசாயிகள் அதிக அளவில் விரும்பும் குறுகிய கால விதை நெல் ரகங்களான ஆடுதுறை 36, 45, கோ 51, டி.கே.9 உள்ளிட்ட ரகங்கள் போதிய அளவு இருப்பு உள்ளது. வடமேற்கு இந்தியாவில் உள்ள பாலைவன வெட்டுக்கிளி கள் தொடர்பாக தகவல்களை அறிய மத்திய அரசு ஜோத்பூரில் எச்சரிக்கை மையத்தை தொடங்கியுள்ளது.
இதனுடன் தினமும் தொடர்பு கொண்டு வெட்டுக்கிளி படையெடுப்பு குறித்து கேட்டு வருகிறோம். தற்போது காற்றின் திசை கிழக்கு நோக்கி இருப்ப தால், வெட்டுக்கிளிகள் பீகார் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் பகுதிக்கு செல்ல வாய்ப்புள்ளது. விந்திய மலைத்தொடரும், மேற்கு தொடர்ச்சி மலைகளும் தமிழகத்துக்கு அரணாக இருப்பதால் வெட்டுக்கிளிகள் இங்கு வர வாய்ப்பில்லை. நம் பகுதியில் 250 வகையான வெட்டுக்கிளிகள் உள்ளது. இவற்றில் சில நன்மை தரும் வெட்டுக் கிளிகளாகும். தமிழ கத்தில் ஒரு சில இடங்களில் காணப்படும் வெட்டுக்கிளிகள் அனைத்தும் நன்மை தருபவை தான். வெட்டுக்கிளிகள் தொடர்பாக விவசாயிகள் தெரிந்து கொள்ளும் வகையில் உழவன் செயலியில் தகவல்களை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், தங்கள் பகுதியில் வெட்டுக்கிளிகள் இருந்தால் அதனை படம் எடுத்து உழவன் செயலியில் பதிவு செய்தால் உரிய ஆலோசனை வழங்கப்படும். முன்னெச்ச ரிக்கையாக பாலைவன வெட்டுக்கிளிகள் வருவதை கண்கா ணிக்க மாநில எல்லைகளில் உள்ள மாவட்டங்களில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் கடந்தாண்டை காட்டிலும் பருத்தி சாகுபடி பரப்பளவு நடப்பாண்டு அதிகரித்துள்ளது. இன்னும் இரு வாரங்களில் பருத்தி கொள்முதல் நடைபெறவுள்ளது. இந்தாண்டு பருத்தி கொள்முதல் செய்ய டெல்டாவில் அதிகம் வரத்து உள்ள பகுதிகளில் இந்திய பருத்தி கழகம் தனது மையத்தை தொடங்கி நேரிடையாக கிலோ ரூ.54.55 பைசாவுக்கு கொள்முதல் செய்ய உள்ளனர்” என்றார்.