தஞ்சாவூர், ஜூன் 6- நாட்டின கலப்பினம், அயலின கறவை மாடுகள் மற்றும்எருமைகள் அன்றைய சந்தை விலைப்படி காப்பீடு செய்யப்படு கின்றன. கால்நடை வளர்ப்போர் தங்க ளிடமுள்ள கால்நடைகளை ஒரு வருடம் அல்லது மூன்று வருடங்களுக்கு காப்பீடு செய்து, 2019- 20 ஆம் ஆண்டில் தேசிய கால்நடை பணி திட்டத்தின் கீழ் தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை வாயி லாக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 4 ஆயி ரம் கால்நடைகளுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு பசு, ஒரு எருமை, பத்து எண்ணி க்கை கொண்ட வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வைத்திருப்பவர்கள் இத்தி ட்டத்தில் சேரலாம். ஒரு நபருக்கு ஐந்து கால்நடைகளுக்கு மட்டுமே காப்பீடு செய்யப்படும். கறவைப் பசு, எருமை இவ்வினங்கள் இரண்டரைவயது முதல் எட்டு வயதிற்குள் இருக்க வேண்டும். வெள்ளா டுகள் அல்லது செம்மறிஆடுகள் ஒன்று முதல் மூன்று வயதிற்குள் இருக்க வேண்டும்.
இத்திட்டத்தில் காப்பீடு செய்ய 2 சதவீதம் மட்டுமே வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சதவீதம்மானியமாக ரூ 10 ஆயிரம் மதிப்புள்ள கால்நடை இனங்களுக்கு, அரசு மானியம் ரூ 100 பயனாளி பங்குத் தொகையை100 காப்பீட்டு தொகையை செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள வர்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இனத்தவருக்கு 70 சத மானியம் ரூ. 10,000 மதிப்புள்ள கால்நடை இனங்க ளுக்கு அரசு மானியம் ரூ.140 பயனா ளிகளுக்கு பங்குத் தொகையை ரூ 60 செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம். அதி கபட்சமாக 35 ஆயிரம்வரை காப்பீடு செய்ய மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர விரும்பும் கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் தங்கள் அருகாமையில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகி எழுத்துப்பூர்வமாக விண்ணப்பம் அளித்து பயன் பெறலாம் என தஞ்சாவூர் ஆட்சியர் தெரி வித்துள்ளார்.