tamilnadu

img

வெளிமாநிலத்தில் இருந்து வருவோர் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுரை

சென்னை, மே 2- சிறப்பு பயண பேருந்து முறைகேடு செய்ப வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்க ளுக்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலா ளர் க.சண்முகம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வெளி மாநிலங்களிலிருந்து வரக்கூடிய  நபர்கள் கண்டிப்பாக 14 நாட்கள் தனி மைப்படுத்தப்பட வேண்டும். ஒரு மாவட்டத்தி லிருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்ப வர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தனிமைப்படுத் தப்படு வதற்கான ஸ்டிக்கரை அவர்களின் வீடு களில் ஒட்ட வேண்டும். தற்போது, தமிழ்நாட்டில், மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு இடையே பயணம்  செய்ய பொதுமக்கள் தடை செய்யப்பட்டுள்ள னர். மேலும் அவசர கால பயண பாஸ்கள்  பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன.?

இந்த பாஸ்களை பெற டி.என் இ-பாஸ்  என்ற ஆன்லைன் போர்டல் TNEGA (https:// tnepass.tnega.org) மூலம் பதிறக்கம் செய்து  கொள்ளலாம். மொபைல் போன்கள் மூலமாக வும் அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம். பிற மாநிலத்திலிருந்து வரும் அனைத்து நபர்களும் வீட்டிலேயே தனிமைப் படுத்த வேண்டும். திருமணம் - நெருங்கிய உறவின ரின் திருமணத்துக்கு மட்டுமே பாஸ் வழங்க  முடியும். ஊரடங்கு முன்பு திருமணம் முடிவு  செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த பாஸூக்கு விண்ணப்பிக்க திருமண அழைப்பி தழ் கட்டாய துணை ஆவணமாக இருக்க வேண்டும்

இறுதிச் சடங்கு - இறுதிச் சடங்கில் கலந்து  கொள்ள நெருங்கிய உறவினருக்கு மட்டுமே  பாஸ் வழங்க முடியும். இதற்காக மருத்துவர்  சான்றிதழ் (அல்லது) கிராம நிர்வாக அலுவலர்  சான்றிதழ் அல்லது இறப்புச் சான்றிதழ் ஒரு  கட்டாய துணை ஆவணம் சமர்பிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.