tamilnadu

img

ஆதனூர் தேவாலய விழா

தஞ்சாவூர் ஜூலை 21- தஞ்சை மறை மாவட்டம் ஆதனூர் பங்கு புனித அன்னம்மாள் தேவாலயத்தின் ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி முக்கிய வீதிகளின் வழியாக மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கை களுடன் கொடிபவனி தேவாலயம் வந்தடைந் தது. கொடியினை ஜெபித்து புனிதப்படுத்திய ஆதனூர் பங்கு தந்தை ஏ.எம். லூர்துசாமி அடி களார் கொடியினை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.  தொடர்ந்து வீரக்குறிச்சி அதிபர் தந்தை கிறிஸ்து அடிகளார், புனல்வாசல் உதவி பங்கு தந்தை விக்டர் அலெக்ஸ் அடிகளார், ஆதனூர் பங்கு தந்தை லூர்துசாமி அடிகளார் ஆகி யோரின் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. தொடர்சியாக பிரசாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இரவு 10 மணிக்கு முனைவர் வேத.குஞ்சருளன் தலைமையில் பட்டுக் கோட்டை புனித தாமஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் தந்தை வி.அடைக்கலராஜ் அடி களார், ஆதனூர் அருட் கன்னியர்களின் முன்னி லையில் அண்ணா சிங்காரவேலு நடுவராக பங்கேற்ற இன்றைய வாழ்க்கை கொண்டாட் டமா? திண்டாட்டமா? என்ற தலைப்பில் சின் னத்திரை பிரபலங்கள் பங்கேற்ற நகைச்சுவை இன்னிசை பட்டிமன்றம் நடைபெற்றது. மேள தாளங்கள், கொடி, பிரசாதம் உள்ளிட்ட அனைத்தையும் உபயமாக துபாய் வின்சென்ட்பால்- லூயிசா, ஆதனூர் பிரான்சீஸ் கண்டாக்- மேரிபாத்திமா குடும்பத்தினர் செய்தனர்.