ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ்
அர்ஜெண்டினா வின் தலைநகர் பியுனோஸ் அயர்ஸில் நடைபெற்ற ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஆட வர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நகால் உள்ளூர் வீரரான பகுன்டோ போக்னிஸை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா வின் சுமித் நகால் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் போக்னிஸை பந்தாடி சாம்பி யன் பட்டம் வென்று, ஏடிபி சேலஞ்சர் பட்டம் வெல்லும் முதல் ஆசியர் என்ற சிறப்புப் பெருமையைப் பெற்றார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் முன்னணி வீரரான ரோஜர் பெடரரை திணறவிட்டவர் தான் இந்த சுமித் நகால் என் பது குறிப்பிடத்தக்கது.