கடலூர் ஆர்ப்பாட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் கேள்வி
கடலூர், ஜூன் 26- சாத்தான்குளத்தில் எளிய வணிகர்களான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்ஆகியோரை கொடூரமாக அடித்துக்கொலை செய்த காவல் துறையினரைக் கைது செய்யக்கோரி தமிழகம் முழுவதும் ஜூன் 26 வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. பல்வேறு மாவட்டங்களில் வணிகர்கள் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். கடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். வணிகர்களின் லாக் அப் மர ணத்திற்கு காரணமான சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், சம்பந்தப்பட்ட காவ லர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். மனித உரிமையை மீறியதோடு பொய் வழக்கு போடப் பட்டதைக் கண்டித்தும், அவர்களது குடும்பத்திற்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் கடலூர் ஜவான் பவன் அருகில் மாவட்டச் செயலாளர் டி. ஆறுமுகம் தலைமையில் ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சுப்ப ராயன், நகரச் செயலாளர் ஆர்.அமர்நாத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர்.
உண்மையை மூடி மறைப்பது ஏன்?
காவல்துறையினரின் கைது நட வடிக்கைக்குப் பின்னர் கே.பால கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறு கையில், சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை சம்பவத்தில் முதலமைச்சர் உண்மையை மூடிமறைக்காமல் குற்ற வாளிகளை கைது செய்ய வேண்டும். காவல் துறையினரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த சம்பவத்தை வன்மை யாகக் கண்டிப்பதுடன் இதில் சம்பந்தப் பட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். நீதிமன்றத்தில் 2 பேரையும் ஆஜர்படுத்திய போது காயங்களை பதிவு செய்ய தவறிய மாஜிஸ்திரேட், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டும் காயங்களை ஒழுங்காக பார்க்காமல் பொய் சான்று வழங்கிய மருத்துவர்களையும் விசாரணை வளை யத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நூற்றுக்கணக்கான மையங்களில் முகக் கவசம் அணிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். கட்சி யின் மத்தியக்குழு, மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தலைமை யில் இப்போராட்டம் நடைபெற்றது.
கடையடைப்பு
சாத்தான்குளம் வணிகர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் வணிகர்கள் ஆவேச மிக்க எதிர்ப்பினை தெரிவித்தனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பிலும், வணிகர்களின் பேரமைப்பு சார்பிலும் கடையடைப்பு போராட்டங் களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டி ருந்தது. தமிழ்நாடு தொழிற் வர்த்தக சங்கமும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தது. மருந்துக்கடைகள் அடையாளப்பூர்வமாக அரைநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. மனிதஉரிமைகளை அப்பட்ட மாக மீறிய சாத்தான்குளம் காவல்துறை யினருக்கும், இப்படுகொலையை மூடி மறைக்கும் தமிழக அரசுக்கும் ஒட்டு மொத்த வணிகர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.