டிஜிபியிடம் புகார்
சென்னை, ஆக. 3 - நியாயத்தை, உண்மையை எழுதக் கூடிய பத்திரிகையாளர்கள், தனிநபர்கள் மீது நடத்தப்படும் சமூக வலைதள தாக்கு தல்கள், கொலைமிரட்டல் மீது நட வடிக்கை எடுக்க கோரி திங்களன்று (ஆக.3) தமிழக காவல்துறை இயக்கு நர் திரிபாதியை சந்தித்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஊடக கண்கா ணிப்பு குழுவினர் மனு அளித்தனர். இந்த குழு சார்பில் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் (திமுக), வழக்கறிஞர் அருள் மொழி (திக), க.கனகராஜ் (சிபிஎம்), சி.மகேந்திரன் (சிபிஐ), மல்லை சத்யா (மதிமுக), அப்துல் சமது (மமக), அப்துல் ரகுமான் (முஸ்லீம் லீக்) உள்ளிட்டோர் டிஜிபியை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அதன்பின்னர் செய்தி யாளர்களிடம் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கூறியதாவது:
தமிழகத்தில் நியாயத்தை, உண்மை எழுதக்கூடிய பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் மிக அதிக அளவில் மன உளைச்சலுக்கு ஆளாகும் வகை யில் தாக்கப்படுகின்றனர். சமூக ஊடகங்கள் வாயிலாக அவதூறு செய்யப்படுகிறார்கள். பத்திரிகையாளர் களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். குறிப்பாக, பெண் ஊடகவிய லாளர்களுக்கு எதிராக நடைபெறக்கூடிய ஆபாசமான தாக்குதல்கள் மீது புகார் அளித்தால் காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை. ஆனால், மத்திய, மாநில அரசுகளைச் சார்ந்தவர்கள், அவர்களின் ஆதரவு பெற்றவர்கள் புகார் கொடுத் தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப் படுகிறது. இது முற்றிலும் தவறானது. எனவே, பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். குற்றம் செய்பவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் இயக்கங்களுக்கு அப்பாற் பட்ட இளைஞர்களும் கூட தங்களுடைய உரிமைக்காக சமூக வலைதளங்களில் குரல் கொடுக்கிறார்கள். அதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆளுங்கட்சியினர் நேரடியாக கொலை மிரட்டல் விடுக்கின்றனர். பெண்களாக இருந்தால் அவருடைய தனிப்பட்ட வாழ்வை குறி வைத்து தவறாக சித்தரிக்கின்றனர். இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, டிஜிபியிடம் வலியுறுத்தி உள்ளோம். சைபர் கிரைம் அதிகாரிகள், மாநகர காவல் ஆணையர் ஆகியோர் மூலம் தேவையான நடவடிக்கைகள் எடுக்க முயற்சி செய்வதாக டிஜிபி கூறியிருக்கிறார். தேவையேற்படின், அடுத்த கட்டமாக சட்டப் போராட்டம் நடத்துவதற்கும் தயாராக இருக்கிறோம் இவ்வாறு அவர் கூறினார்.