tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

காங்கிரஸ் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தொடர்ந்து செயலாற்றுவார் என்று அக்கட்சியின் மேலிடம் தெரிவித்துள்ளது.

கட்சி தலைமை குறித்து கடிதம் எழுதியவர்கள் பாஜகவுடன் தொடர்பு வைத்துள்ளார்கள் என ராகுல் காந்தி கூறவில்லை என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கோர பிரசாந்த் பூஷண் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என்று தில்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

ஒபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில், அதிமுகவின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமராவதி அணையில் இருந்து பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து வருகிற 27 ஆம் தேதி, டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொள்கிறார்.