tamilnadu

img

கொரோனா பேவிஃபிராவிர் மருந்துக்கு இந்திய ஆணையம் ஒப்புதல்

மும்பை,ஜூன் 20- கொரோனா  நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய பேவிஃபிராவிர் என்ற மாத்திரையை மும்பையை சேர்ந்த கிளென்மார்க் பாராமெடிக்கல்ஸ் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. லேசான மற்றும் மிதமான கொரோனா பாதிப்புள்ளவர்களிடத்தில் இந்த மருந்தை கொடுத்து பார்த்ததில் 88 சதவிகிதம் வரை வெற்றி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது வாய் வழியாக கொடுக்கப்படும் மருந்து. இதனால், நரம்புகள் வழியாக கொடுக்கப்படும் சிகிச்சையை காட்டிலும் எளிதானதாக இருக்கும் என்றும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் ஃபேவிஃபிராவிர் மருந்துக்கான உற்பத்தி மற்றும் விற்பனைக்கான அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் வழங்கியுள்ளது.

இந்த மருந்துக்கு ‘அவசரகால பயன்பாடு ‘ என்பதன்  கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.ஃபேபி ப்ளு என்ற பிராண்டின் கீழ் ஃபேவிஃபிராவிர் என்ற மாத்திரையை கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்க டிசிஜிஐ  அனுமதி அளித்துள்ளது பேவிபிராவீர் (ஃபேவிபுளூ) என்ற பெயரிலான மாத்திரை சனிக்கிழமையன்று  மாலை முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட கூடும் என கூறப்படுகிறது. இந்த மாத்திரை ஒன்றின் விலை ரூ. 103 ஆகும். இந்த மாத்திரை மருத்துவமனைகள் மற்றும் மருந்து கடைகளில் கிடைக்கும்.  மருந்து சீட்டில் டாக்டர் எழுதி தந்த பின்னரே இந்த மாத்திரை தேவையானவர்களுக்கு விற்க அனுமதிக்கப்படும். நோயாளிகளின் முழு ஒப்புதலை கையொப்பம் வாயிலாக பெற்ற பிறகே, அவர்களுக்கு இந்த மருந்து வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.