சென்னை, நவ. 30- சிலைக் கடத்தல் தடுப்பு வழக்குகளின் அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்குமாறு பொன். மாணிக்க வேலுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தால் சிறப்பு அதிகாரியாக நிய மிக்கப்பட்ட பொன். மாணிக்கவேலின் பணிக்காலம் நிறைவு பெறும் நிலையில், தமிழக அரசு ஆவணங் களை ஒப்படைப்பது தொடர்பான அரசாணை யைப் பிறப்பித்துள்ளது.
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் கீழ் தொட ரப்பட்ட வழக்குகளின் ஆவணங்களைச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியிடம், பதவிக் காலம் முடிவடையும் இன்றைக்குள் உடனடியாக ஒப்ப டைக்குமாறு பொன். மாணிக்கவேலுக்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதி காரியாக நியமிக்கப்பட்ட பொன். மாணிக்கவேலின் பணிக்காலம் நிறைவு பெறும் நிலையில், இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தமிழக அரசு இந்த அரசாணை யைப் பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், சிலைக் கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் ஓய்வு பெற உள்ள நிலையில், அவரது பதவியை நீட்டிக்கக் கூடாது என்று தமிழக அரசு தரப்பில் தொடரப்பட்ட வழக்கு டிசம்பர் 2ம் தேதி விசாரணைக்கு வர உள்ள நிலை யில், இந்த விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தெரி வித்திருந்தது குறிப்பிடத்தக்கது.