இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பு தொடர்பாக பாதுகாப்பு துறை முன்னால் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்த இலங்கை காவல்துறை தலைவர் பூஜித் ஜெயசுந்தரா ஆகியோர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில், கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி ஈஸ்ட்ர் தினத்தன்று பல இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த தாக்குதல்கள் குறித்து முன்னதாகவே தகவல் அறிந்திருந்த போதிலும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க தவறியதாக பாதுகாப்பு துறை முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்ட இலங்கை காவல்துறை தலைவர் புஜித் ஜெயசுந்தரா ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், இவர்களை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டிருந்தது. ஆனால் இருவரும் மருத்துவ சிகிச்சையை காரணம் காட்டி வர மறுத்ததை அடுத்து நரஹென்பிட்டாவில் உள்ள காவலர்களுக்கான மருத்துவமனைக்கு வைத்து புஜித்தையும், பின்னர் தேசிய மருத்துவமனையில் வைத்து ஹேமசிறியையும் அதிகாரிகள் கைது செய்தனர்.