tamilnadu

குடும்பத் தகராறு கணவர் தற்கொலை

சிவகாசி, மே.31- சிவகாசி அருகே குடும்பத் தகராறில் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.  சிவகாசி காமராஜபுரம் காலனி யைச் சேர்ந்தவர் லிங்கராஜ்(34) அச்சகத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி பொன்செல்வி (30). இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை நடைபெறுமாம். இந்நிலை யில், உறவினரின் திருமண நிகழ்ச்சிக் காக பொன் செல்வி சென்றாராம். , அவரை திரும்பி வரும்படி லிங்கராஜ் செல்லிடப் பேசியில் அழைத்துள்ளார். ஆனால், பொன்செல்வி திரும்பவில்லை. இத னால், மனமுடைந்த லிங்கராஜ் வீட்டில் தூக் கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இச்சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்