சிவகங்கை நேற்று இரவு பெய்த கனமழையால் பேருந்து நிலையம் முழுவதும் மழைநீர் தேங்கி பெரிய குளம் போன்று காட்சியளிக்கிறது.
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் பயணிகள் செல்லும் வகையில் பேருந்து நிலையம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் பேருந்து நிலையத்தின் தரைதளத்தை உயர்த்தி கட்டவேண்டும் என்றும் வடிகால் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தும் நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதால் மழைக்காலத்தில் மழைநீர் பேருந்து நிலையம் முழுவதும் குளம் போன்று மழைநீர் தேங்கிக் கிடக்கிறது இதனால் பயணிகள் அவதியடைகின்றனர். மேலும் இதனால் நோய் தொற்று ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. சிவகங்கை நகராட்சி மக்களுக்கான நகராட்சியாகச் செயல்பட வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.