சேலம்,மே 15- மணல் குவாரிகளை திறக்கக்கோரியும், மணல் குவாரி களை அரசே ஏற்று நடத்த கோரியும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப் பட்டது. இதனை தொடர்ந்து சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் மாவட்ட தலைவர் கண்ணையன், பழனிசாமி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஊரடங்கு உத்தரவினால் பல்வேறு தொழில்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் கட்டுமான தொழில்கள் முழு வதும் முடங்கியுள்ளது. மேலும் மணல் உள்ளிட்ட அத்தியா வசிய பொருட்கள் எடுத்து வர முடியாத சூழ்நிலை உருவாகி யுள்ளது. எனவே இந்த ஊரடங்கு உத்தரவினால் பல்வேறு இன்னல்களுக்கு மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் அதை சார்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை சரி செய்யும் வகையில் அரசு உடனடியாக மணல் குவாரிகளை திறக்க வேண்டும். பீஸ் அண்ட் எம் சான்ட் பார் களை அரசே ஏற்று நடத்த வேண்டும். மேலும், தற்போது தமிழகத்தில் மதுக்கடையை திறக்க அக்கறை காட்டும் இந்த ஆட்சியாளர்கள் மணல் குவாரியை திறக்க மௌனம் காப்பது வேதனை அளிக் கிறது. எனவே தமிழக அரசு உடனடியாக மணல் குவாரியை திறக்க நடவடிக்கை எடுத்து பல்லாயிரக்கணக்கான தொழி லாளர்களின் வாழ்க்கைத் தரத்தை பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.