tamilnadu

img

சேலம் மாநகரத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடுக வாலிபர், மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

சேலம், ஆக. 17- சேலம் மாநகர மேற்கு பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடக் கோரி வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகரம் முழுவதும் சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதை சீரமைத் திட வேண்டும். குடியிருப்புப் பகுதிகளில் குடிநீர்த் தொட்டிகளை முறையாக பராம ரித்திட வேண்டும். காசக்காரனூர் பகுதிக ளில் சாக்கடை வசதி ஏற்படுத்திட வேண் டும்.  24வது டிவிஷனில் துணை சுகாதார நிலையத்தை புதுப்பித்து மக்கள் பயன்பாட் டிற்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங் கத்தின் மேற்கு மாநகரக் குழுவினர் சூரமங் கலம் மாநகராட்சி மண்டலக்குழு அலுவல கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க  மாநகரச் செயலாளர் வி.ஜெகநாதன், மாதர் சங்க மாநகரச் செயலாளர் ஆர்.ஜெயமாலா ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பி. கணேசன், மாதர் சங்க மாவட்டச் செயலா ளர் ஐ.ஞானசவுந்தரி, வாலிபர் சங்கம் மேற்கு மாநகரத் தலைவர் கண்ணதாசன், மாந கர பொருளாளர் கார்த்தி, மாதர் சங்க மாந கரத் தலைவர் மகேஸ்வரி, பொருளாளர் லட் சுமி உள்ளிட்ட முன்னணி ஊழியர்கள் திர ளானோர் கலந்து கொண்டனர்.