tamilnadu

img

மகுடஞ்சாவடி பகுதியில் டெங்கு ஒழிப்பு பணி

இளம்பிள்ளை. நவ.14- மகுடஞ்சாவடி வட்டார பகுதியில் மர்ம காய்ச்சல் அதிக ரித்துள்ளதால் டெங்கு ஒழிப்பு பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது. சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே மகுடஞ் சாவடி வட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக இடங்கணசாலை பேரூராட்சி தப்பக்கட்டை ஊராட்சி, கூடலூர் ஊராட்சி, மகுடஞ்சாவடி பகுதியில் காய்ச்சலால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த முடியாமல்  சுகாதாரத்துறையினர்  திணறி வருகின்றனர். இதையடுத்து  வியாழனன்று டெங்கு ஒழிப்பு பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. மகுடஞ்சாவடி வட்டாரம்  பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணி வட்டார மருத்துவ அலுவலர் முத்து சாமி, மகுடஞ்சாவடி வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்க டேசன் ஆகியோர் தலைமையில் டெங்கு ஒழிப்பு பணி யாளர்கள் 160 பேர் மற்றும் மருத்துவர்கள், சுகாதார ஆய்வா ளர்கள் , சித்த மருத்துவர் ராமு உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .  இப்பணியானது கூடலூர் மற்றும் மகுடஞ்சாவடி ஊராட்சி பகுதியில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடு, கடைகள், தொழில் கூடங்கள் மற்றும் பொது இடம் உள்ளிட்டவைகளில் கொசு மருந்து அடிக்கப்பட்டது. மேலும் நிலவேம்பு கசாயம், மருந்து, மாத்திரைகள் வழங்கப் பட்டு வருகின்றன. மேலும் 20க்கும் மேற்பட்ட டெங்கு ஒழிப்பு புகை மருந்து அடிப்பு மெஷின்கள் மூலம் புகை  அடித்து வந்தனர் இப்பகுதியில் பரவும் டெங்கு, வைரஸ்  உள்ளிட்ட மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.