tamilnadu

சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயற்சி

சேலம், செப்.3- சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தம்பதியினர் தற்கொலைக்கு முயன்ற தால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் அருகே அங்கம்மாள் காலனி  கண்ணன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் - பூபதி தம்பதியினர். இவர் களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்  குழந்தைகள் உள்ள நிலையில் குடும்ப  சூழ்நிலை காரணமாக கடந்த ஒன்றரை  ஆண்டுகளுக்கு முன்பு தனது காரை பள்ளப்பட்டி அருகே உள்ள தனியார் கன்சல்டிங் நிறுவன உரிமையாளரிடம், முன் பணமாக 30 ஆயிரம் பெற்றுக் கொண்டு 1.25 லட்சம் ரூபாயை  தவணை முறையில் செலுத்தும் வகையில் விற் பனை செய்துள்ளார். இந்நிலையில் காரை பெற்றுக்கொண்ட கன்சல்டிங் உரிமையாளர் தவணைத் தொகையை கொடுக்காமல் கடந்த ஒன்றரை ஆண்டு களாக முருகனை ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.  இதுகுறித்து முருகன் மற்றும் பூபதி  தம்பதியினர் பள்ளபட்டி காவல் நிலையத்தில், காவல் ஆய்வாளர் சாலை சக்திவேலிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் அவர்களின் புகார் மனு மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த தம்பதியினர் காருக்கான உரிய தொகையை  பெற்றுத்தர வலியுறுத்தி செவ்வாயன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  திடீரென தங்கள் மீது மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தனர். இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் இருவரையும் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.