tamilnadu

img

அக்பரை இழிவுபடுத்தி பாஜக தலைவர் பேச்சு

ஜெய்ப்பூர்:
முகலாய பேரரசர் அக்பர், பெண்களிடம் தவறாக நடந்து கொண்டவர் என்று, ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மதன் லால் சைனி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

ராஜஸ்தானில் நடைபெற்ற மகா ராணா பிரதாப் ஜெயந்தி நிகழ்ச்சியில், பாஜக மாநிலத் தலைவர் மதன் லால் சைனி கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போதுதான், ‘மீனா பஜார்’ என்ற முழுக்க முழுக்க பெண்கள் மட்டும் வேலை செய்யும் கடை வீதிகளை அமைத்து, அக்பர் பெண்களை தவறாக பயன்படுத்தியதாக கூறியுள்ளார். 

மேலும், ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த கிரண் தேவி என்ற பெண்ணிடம் அக்பர் தவறாக நடக்க முயன்றபோது, அவர் அக்பரை கீழே தள்ளி, கத்தியை வைத்து மிரட்டியதாகவும், அதன் பின் மீனா பஜாரை அக்பர் மூடிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மதன்லாலின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத துவேஷம் ஏற்படுத்தும் வகையிலான, இதுபோன்ற பேச்சுக்களை பாஜக தலைவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளார்.