tamilnadu

img

ரூ.1000 நிவாரணம்: அலைமோதும் கூட்டம்


தமிழ்நாடு முழுவதும்ரேஷன் கடைகள் மூலம் 1,000 ரூபாய் நிவாரணத் தொகையும் விலையில்லா பொருட்கள் விநியோகம் ஏப்ரல் 2 முதல் துவங்கியது.
சென்னையை அடுத்த பெருங்களத்தூரில், ரேசன் கடையில் நிவாரண தொகைக்கான டோக்கன் கள் வாங்க குவிந்த மக்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. அக்கூட்டத்தில் தென்பட்ட பெரும்பாலானோர், பாதுகாப்பு முக கவசமும் அணியவில்லை.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ரேஷன் கடையொன்றில், ஆண்கள், பெண்கள் என சுமார் 100க்கும் மேற்பட் டோர் சமூக இடைவெளியை பின்பற்றாமல் டோக்கன் வாங்க குவிந்தனர். கொரோனா குறித்த அபாயம் இல்லாமலும் பாதுகாப்பு முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாமலும் பொது மக்கள் இதுபோல நடந்து கொள்வது ஆபத்தை விளைவிக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

சேலம் பகுதியில் உள்ள சில ரேசன் கடைகளிலும் ஏராள மான மக்கள் டோக்கன் வாங்க திரண்ட னர். இவர்களில் பலர் முக கவசங்களை அணியாத் துடன், சமூக இடைவெளி யையும் பின்பற்றாமல் கூட்டம் கூடினர். கொரோனா ஆபத்தை உணராமல் திரண்டதைக் கண்டு அங்கு வந்த போலீசார், இடை வெளிவிட்டு நிற்குமாறு பொதுமக்களை அறிவுறுத்தினர். 
இந்த நிலையில், அரசு சார்பில் வழங்கப்படவுள்ள 1000 ரூபாய் நிவாரண நிதிக்கான டோக்கன்களை வாங்க, ரேசன் கடைகளில் முண்டியடித்துக் கொண்டு மக்கள் குவிந்ததை அடுத்து, வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

டோக்கன் அளிக்கப்பட்ட நிலையில் ரேசன் கடைகளில் அவற்றின் விநியோகம் வியாழனன்று (ஏப். 2) காலை தொடங்கியது. பணம் மற்றும் பொருள் விநியோகம் 15 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும்,  கூட்டத்தை தவிர்க்க டோக்கனில் உள்ள தேதியன்று ரேசன் கடைக்கு வர அறிவுறுத்தப் பட்டுள்ளது.முண்டியடிக்கும் கூட்டம்

கூட்டத்தை தவிர்க்க வீட்டிற்கே சென்று டோக்கன் வழங்கிய நிலையில், ஆயிரம் ரூபாய் மற்றும் பொருட்களை வாங்க சென்னை மாநகரில் அனைத்து ரேஷன் கடைகள் முன்பும் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றது.

பல இடங்களில் காவல்துறையினர் தலையிட்டும் கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றதால் ஒரு சில கடைகள் திறந்த வேகத்திலேயே அடைக்கப்பட்டன. 

சமூக இடைவெளி வேண்டும் என்ற அரசின் உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகையை சம்பந்தப்பட்ட குடும்பத் தலைவரின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்றும் அப்போதுதான் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என்றும் காவல்துறை யினரும் சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.