புதுக்கோட்டை, அக்.1- புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை வகித்தார். முன்னதாக மழலையர் வகுப்பில் பயிலும் தேவிகா என்ற குழந்தை காந்தியடிகள் பற்றி உரை யாற்றியது. ஆசிரியைகள் நிஷாந்தி, ஜெயலெட்சுமி ஆகி யோர் காந்தியடிகள் பற்றி நினைவுகளை தமிழிலும் ஆங்கி லத்திலும் பகிர்ந்துகொண்டனர். துணைமுதல்வர் குமார வேல், காசாவயல் கண்ணன் ஆகியோர் காந்தியின் நூற் றைம்பதாவது பிறந்தநாள் குறித்து மாணவர்கள் மத்தி யில் உரையாற்றினர். குழந்தைகள் அனைவருக்கும் இனிப்பும், நினை வுப்பரிசுகளும் வழங்கப்பட்டது. விழாவினில் ஏராளமான பெற்றோர்களும் ஆசிரியப் பெருமக்களும் கலந்துகொண் டனர். விழாவினை ஆசிரியை ஆனந்தி ஒருங்கிணைத்தார்.