tamilnadu

img

புதுக்கோட்டை அருகே பெண்ணை எரித்து ஆணவப் படுகொலை? குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தல்

புதுக்கோட்டை, ஜூன் 13- புதுக்கோட்டை அருகே இளம்பெண் சாவில் மர்மம் இருப்ப தாகவும், அந்தப் பெண் வேறு சாதியை சேர்ந்தவரை காதலித்தார் என்பதற்காக எரித்துப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திரு வரங்குளம் அருகே தோப்புக் கொல்லை கிராமத்தைச் சேர்ந்த வர் ராஜேந்திரன் மகன் விவேக். பெயிண்டராக வேலை செய்து வரு கிறார். அருகே உள்ள இடையன் வயலைச் சேர்ந்த நாகேஷ்வரன் மகள் சாவித்திரி. புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த வெவ்வேறு சாதியினர்.

இந்நிலையில் காதல் விவகாரம் சாவித்திரியின் உறவினர்களுக்குத் தெரியவர கடும் எதிர்ப்புத் தெரி வித்துள்ளனர். மேலும், சாவித்தி ரியை வேறு ஒரு மாப்பிளைக்கு திரு மணம் செய்து வைப்பதற்கான ஏற்பா டுகளும் நடந்துள்ளன. இதனால், தன்னை வெளியூருக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள் ளும்படி சாவித்திரி விவேக்கை வற்புறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் உதவியுடன் சாவித்தி ரியை அழைத்துக் கொண்டு ஒரு காரில் விவேக் கோயம்புத்தூர் சென்றுள்ளார். கரூர் மாவட்டம் குளித்தலை என்ற இடத்தில் காரை மறித்து போலீசார் சோதனை செய்துள்ளனர். அப்போது ஒரு இளம்பெண் காரில் இருப்பதைப் பார்த்து காவல் நிலை யத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி யுள்ளனர். விசாரணையில் விவேக்கு க்கு திருமண வயதை அடைவதற்கு நான்கு மாதங்கள் பாக்கி இருப்பதை அறிந்த போலீசார் இரு வீட்டாருக்கும் தகவல் தெரி வித்துள்ளனர்.

காப்பகத்துக்கு அனுப்ப மறுத்து காவல்துறை
இதனைத் தொடர்ந்து திரு வரங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுகம், ஒன்றியக் கவுன்சிலர் கருப்பையா மற்றும் பெண்வீட்டார் காவல் நிலையத்தி ற்கு வந்துள்ளனர். அங்கு பெற்றோரு டன் தன்னை அனுப்ப வேண்டாம் என்றும் மீறி அனுப்பினால் தன்னை கொலை செய்துவிடுவார்கள் எனவும், ஏற்கனவே தன்னை கொலை செய்யும் நோக்கில் தாக்கியுள்ள தையும் கூறி தன்னை ஹோமுக்கு வேண்டுமானால் அனுப்புங்கள் எனவும் போலீசாரிடம் சாவித்திரி மன்றாடியுள்ளார். ஆனால், அதை மறுத்த போலீசார் “உனக்கு காவல் துறை சார்பில் போதிய பாதுகாப்பு வழங்கப்படும். நான்கு மாதங்கள் கழித்து விவேக்குடன் திருமணம் செய்து வைக்கப்படும்”; எனத் தெரிவித்து அனுப்பியுள்ளனர். இந்நிலையில், கடந்த புதன்கிழ மையன்று இரவு சாவித்திரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி சடலத்தை அன்று இரவே உறவினர்கள் எரித்து விட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியினரி டையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியும் வேதனை யும் அடைந்த விவேக் புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் பி.சுசீலா, செயலாளர் டி.சலோமி. பொரு ளாளர் எஸ்.பாண்டிச்செல்வி, துணைச் செயலாளர் கே.நாடியம்மை, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலா ளர் சி.அன்புமணவாளன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

காதலன் மீது தாக்குதல்
அந்த மனுவில், கடந்த புதன்கிழ மையன்று காலை 9 மணியளவில் சாவித்திரியின் உறவினர்கள் தன்னை கடத்திச் சென்று கொலை செய்யும் நோக்கத்தில் கடுமையா கத் தாக்கியதாகவும், பகல் நேர மானதால் அங்கிருந்து தப்பித்து வெளியேறி விட்டதாகவும் விவேக் தெரிவித்துள்ளார். மேலும், தனது காதலி சாவித்திரி தற்கொலை செய்துகொண்டிருக்க மாட்டார் எனவும் நிச்சயமாக அவர் படு கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும், உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். மாதர் சங்க மாவட்டச் செயலா ளர் டி.சலோமி கூறுகையில், எங்கள் சங்கம் சார்பிலும் காவல் கண்கா ணிப்பாளரிடம் நடவடிக்கை கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. நடந்துள்ள சம்பவங்களை வைத்துப் பார்க்கும்போது, நிச்சயமாக இது தற்கொலையாக இருக்க வாய்ப் பில்லை. அப்படியே தற்கொலை யாக இருந்தாலும் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்காமல் அவசர அவசரமாக எரிக்கப்பட்டது ஏன்?

பாதுகாப்பு கொடுக்க தவறிய காவல்துறை
எனவே, இது திட்டமிடப்பட்ட சாதி ஆணவப்படுகொலையே! எனவே, நடந்துள்ள சம்பவம் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து தீவிர புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும். குற்ற வாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும். தன்னை பெற்றோருடன் அனுப்ப வேண்டாம் எனக்கூறிய பெண்ணிடம் உரிய பாதுகாப்புத் தரு வதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவ்வாறு பாதுகாப்பு கொடுக்கத் தவறிய போலீசார் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழக அரசம், மாவட்ட நிர்வாகமும் நட வடிக்கை எடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.