அறந்தாங்கி, ஜூன் 7- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ராஜேந்திரன் என்ற பாண்டி திருட்டு வழக்கு சம்பந்தமாக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அவரது மனைவியையும் தொடர்ந்து இரண்டு நாட்களாக வழக்கு சம்பந்தமாக விசாரணைக்கு அறந்தாங்கி காவல் நிலையத்திற்கு வர சொல்லி அலைக்கழித்ததால் மனமுடைந்த செல்வி (40) வரும் போதே பாட்டிலில் மண்ணெண்ணையை பையில் எடுத்து வந்திருக்கிறார். யாரும் எதிர்பாராத நிலையில் காவல் நிலையம் முன்பு தன் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீயை வைத்து கொண்டார். காவல்துறையினர் உடனடியாக தீயை அனைத்தனர். பலத்த தீக் காயத்து டன் அவரை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்கு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்வி, அறந் தாங்கி காந்தி நகர் பகுதியில் வசித்து வருகிறார். சிறையில் இருக்கும் ராஜேந்திரனுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி மாலதி ஏற்கனவே இறந்த நிலையில் இரண்டாவது மனைவி செல்வி மற்றும் 3 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் செல்வி தற்கொலை முயற்சியால் இவர்களது ஐந்து குழந்தை களும் கண்ணீருடன் மருத்துவமனைக்கு வந்தனர்.