பொன்னமராவதி, மே 20- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல் நிலைய எல் லைக்குட்பட்ட மூங்கிதான்பட்டி அரசு மதுபானக் கடையில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற கீழதுருவாசபுரம் கிரா மத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த பொன்ன மராவதி காவல்துறை கண்காணிப்பாளர் தமிழ்மாறன் மேற் பார்வையில் பொன்னமராவதி காவல் ஆய்வாளர் கருணா கரன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர், திரு மயம் பகுதிகளைச் சேர்ந்த ராமச்சந்திரன், முகமது இப்ராஹிம், முகமதுநஸ்ருதீன், சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த சுரேஷ், நாகர்கோவிலை சேர்ந்த மணிகண்டன் உள்ளிட்ட 6 பேரி டம் இருந்து 65,43,440 ரூபாய் கள்ள நோட்டுகளை கைப்பற்றினர். மேலும் ஒரு பக்கம் மட்டுமே அச்சடிக்கப்பட்ட மூன்று லட்சம் மதிப்புள்ள நோட்டுகளையும் அதற்கு பயன்படுத்திய லேப்டாப், ஸ்கேனர், பிரிண்டர் மெஷின் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.