tamilnadu

ரூ.12 லட்சம் திருட்டு செல்போன்கள் மீட்பு

புதுக்கோட்டை ஆக.31- புதுக்கோட்டை மாவட்டத்தில் செல்போன்கள் திருட்டு புகார்கள் குறித்து தனிப்படை விசாரித்து வந்தனர். இதில் திருட்டு போன செல்போன்களில், ரூ.12.90 லட்சம் மதிப்புள்ள 101 போன்களை  திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உள்ளி ட்ட மாவட்டங்களில் இருந்து மீட்டனர். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெள்ளியன்று செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. தனிப்படையினரும் பாராட்டப்பட்டனர்.