தொழிலாளர் குடும்பத்தினர் வாழ்வாதாரம் கருதி மூன்று நாள் சம்பளப் பிடித்தம் செய்யக் கூடாது உள்ளிட்டவை வலியுறுத்தி பொன்னமராவதி அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக எல்.பி.எப், சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எல்.பி.எப் மத்திய சங்கத் தலைவர் அடைக்கலம் தலைமை வகித்தார். சிஐடியு வேளாங்கண்ணி முன்னிலை வகித்தார். கிறிஸ்டோபர், கணேசன், வெள்ளைச்சாமி, சந்தானம், அழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.