தரங்கம்பாடி, ஆக.29- மயிலாடுதுறை மாவ ட்டம் தரங்கம்பாடி வட்டாட்சி யர் அலுவலகத்தில் ஒலி-ஒளி அமைப்பாளர்கள் சங்க த்தை சேர்ந்த ஏராளமானோர் அரசு உதவி செய்ய பரிந்து ரைக்க வேண்டுமென கோரி மனு அளித்தனர். தரங்கம்பாடி தாலுகா ஒலி-ஒளி அமைப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் திமுக மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் தலை மையில் வட்டாட்சியர் கோம தியிடம் கோரிக்கை மனு க்களை அளித்தனர். கொ ரோனா ஊரடங்கால் தொழில் செய்ய முடியாமல் தவிப்ப தாகவும், மற்ற தொழில்கள் செய்ய அனுமதி அளி த்துள்ள தமிழக அரசு தங்க ளையும் அனுமதிக்க வேண்டும். மத்திய அரசு அறிவித்த நிதியுதவியை உடனடியாக வழங்க வேண்டும். குறைந்த முதலீட்டில் ஒலி பெருக்கி களை வீடுகளில் வைத்து தொ ழில் செய்தால் அபராதம் விதி ப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகள் அடங்கிய மனு க்களை வட்டாட்சியரிடம் அளித்தனர்.