சேலம்,டிச.4- மேச்சேரி எம்.காளிப்பட்டியில் வெள்ள உபரிநீரினை ஏரிகளுக்கு வழங்கும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.இதனை சேலம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய் தார். சேலம் மாவட்டம், மேச்சேரி எம்.காளிப் பட்டியில் உள்ள ஏரியில் பொதுப் பணித் துறை, நீர்வள ஆதாரத்துறையின் மூலம் மேட்டூர் அணையின் மழைக்கால வெள்ள உபரி நீரை சேலம் மாவட்டத்தின் சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட 100 ஏரி களுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத் திற்கான பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் நேரில் ஆய்வு செய்தார். இதன்பின் அவர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், ரூ.565 கோடி மதிப்பீட்டில் மேட்டூர் அணையின் மழைக்கால வெள்ள உபரி நீரை சேலம் மாவட்டத்தின் சரபங்கா வடி நிலத்தில் உள்ள வறண்ட 100 ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத்தினை அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர், எடப் பாடி, சங்ககிரி மற்றும் ஓமலூர் ஆகிய வட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வறண்ட 100 ஏரிகளில் நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத்திற்கான பணிகள் குறித்து முதற்கட்ட ஆய்வு நடைபெற்று வரு கின்றது.
மேட்டூர் அணையின் முழு கொள்ள ளவான 120 அடியை எட்டும்போது அணை யின் இடது கரையின் நீர் பரப்பு பகுதியில் இருந்து வெள்ள உபரிநீரை மின் மோட் டார்கள் மூலம் கால்வாய் மூலம் திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அந்நீரேற்று நிலையத் திலிருந்து எம்.காளிப்பட்டி ஏரிக்கு மழைக் கால உபரிநீர் கொண்டு செல்லப்பட்டு, இந்த ஏரியிலிருந்து 67 ஏரிகளுக்கும் மற்றும் நங்கவல்லி ஏரிக்கு இதேபோல் மழைக் கால உபரிநீர் கொண்டு செல்லப்பட்டு நங்கவல்லி ஏரியிலிருந்து 33 ஏரிகளுக்கும் என மொத்தம் 100 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்குவதற்கான பணிகளை மேற்கொள் வதற்கான பணிகள் நடைபெற்று வரு கின்றன. மழைக்கால உபரி நீர் வீணாகச் சென்று கடலில் கலப்பதை தடுத்து விவசாயப் பணி களுக்கு பயன்படுத்துவதற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் உரிய ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டது. மேட்டூர் அணை கட்டப் பட்டு ஏறத்தாழ 85 ஆண்டுகள் ஆகின்ற நிலையில் இதுவரையில் மேட்டூர் அணை வரவாற்றில் நிறைவேற்றப்படாத மேட்டூர் அணையின் மழைக்கால வெள்ள உபரி நீரை சேலம் மாவட்டத்தின் சரபங்கா வடி நிலத்தில் உள்ள வறண்ட 100 ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்திட ரூ.565.00 கோடி நிதியி னையும் வழங்கி உள்ளனர்.
இத்திட்டத்தின் மூலம் சேலம் மாவட் டத்தில் உள்ள மேட்டூர், எடப்பாடி, சங்க கிரி மற்றும் ஓமலூர் ஆகிய வட்டங் களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் 4,238 ஏக்கர் நிலங்கள் பயன்பெறக்கூடிய வகையில் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட ஏரிகள் என மொத்தம் 100 ஏரிகளில் மேட்டூர் அணையின் மழைக்கால வெள்ள உபரி நீர் நிரப்பப்படுகின்றது. இந்நீரைக் கொண்டு நீரேற்றுத் திட்டம் மூலமாக குழாய் வழியாக மேச்சேரி எம்.காளிப்பட்டி ஏரி மற்றும் நங்க வள்ளி ஏரி ஆகிய 2 ஏரிகளில் நீர் நிரப்பி மற்ற பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு கொண்டு செல்லும் வகையில் இத்திட்டம் தீட்டப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங் களுக்குட்பட்ட 12 பொதுப் பணித்துறை ஏரிகள் மற்றும் 88 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் குட்டைகள் என மொத்தம் 100 ஏரிகள் மற்றும் குட்டைகளுக்கு இந்நீர் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் ஓராண்டுக்குள் நிறைவு செய்ய கால அவ காசம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக, இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.திவாகர், மேட்டூர் சார் ஆட்சியர் ஜி.சரவணன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.