tamilnadu

img

வளர்ச்சி திட்ட பணிகள் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நாமக்கல், பிப். 5- எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகு திகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட் டப்பணிகளை புதனன்று மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட பொம்மப்பட்டி, அக்கலாம்பட்டி, கிளாப் பாளையம் மற்றும் நல்லிபாளையம் ஆகிய ஊராட்சிகளுக் குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்து றையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், பொம்மப்பட்டி ஊராட்சியில் பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத் தின் கீழ் ரூ.1.11 கோடி மதிப்பீட்டில் மஞ்சநாய்க்கனூர் சாலை முதல் ஒட்டவம்பாளையம் சாலை வரை தார் சாலை அமைக்கப்பட்டு வரும் பணியினையும், அக்கலாம்பட்டி ஊராட்சியில் ரூ.19.60 லட்சம் மதிப்பீட்டில் எலந்தக்காடு பகுதியில் தார் சாலை அமைக்கப்பட்டு வரும் பணியி னையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிய ளிப்பு திட்டத்தின் கீழ் கிளாப்பாளையம் ஊராட்சியில் ரூ.84 ஆயிரம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடப்பட்டு, நீருற்றி  பரா மரிக்கப்பட்டு வரும் பணியினையும், கிளாப்பாளையம் ஊராட்சியில் சி.காளியண்ணன் நிலத்தில் ரூ.15 ஆயிரம் மதிப்பீட்டில் தீவன வளர்ப்பு தொட்டி அமைத்து அசோலா தீவனம் வளர்க்கப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.