tamilnadu

img

பெரம்பலூர் கூட்டுறவு தேர்தல்

பெரம்பலூர், செப்.21- பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவராக ஆலத்தூர் அதிமுக ஒன்றிய செயலாளர் என்.கே.கர்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் அறப்பளி முன்னிலை வகித்தார். கூட்டுறவு சார்பதிவாளர் செல்வராஜ் தேர்தல் நடத்தும் அலுவலராக நிர்வகித்தார். இதில் தலைவராக ஆலத்தூர் அதிமுக ஒன்றிய செயலாளரும், ஆலத்தூர் அக்ரோ தலைவருமான கர்ணனும், துணை தலைவராக அரியலூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க துணைத் தலைவர் பாஸ்கர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதைதொடர்ந்து இயக்குநர்களாக வீரபாண்டியன், சிவக்குமார், சவுந்தராஜன், கொளஞ்சிநாதன், செல்வராஜ், ஒ.பி.சங்கர், அன்பழகன், பி.ஆர்.செல்வராசு, செங்கமலை, பாலு, ரவி, செல்வமணி, லலிதா, சித்ரா, மஞ்சுளா, கல்யாணி, செல்லம், கண்ணகி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வராஜ், தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கர்ணனுக்கு வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். இதையடுத்து மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கர்ணன் மரியாதை நிமித்தமாக அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், எம்எல்ஏக்கள் ஆர்.டி.ராமச்சந்திரன், குன்னம் இரா.தமிழ்ச்செல்வன், பெரம்பலூர் ஜெயராமலிங்கம் ஜெயங்கொண்டம் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.