tamilnadu

img

ரேசன் கடை ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம்

சென்னை, ஏப்.1- ரேசன் கடை விற்பனையாளர்களை யும், பாக்கெட் கட்டுகிறவர்களையும் ஊக்குவிப்பதற்காக, விற்ப னையாளர்களுக்கு ரூ.2,500-ம், பாக்கெட் கட்டுவோருக்கு ரூ.2 ஆயிரமும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கூடு தல் தலைமைச் செயலாளர் தயானந்த்  கட்டாரியா வெளியிட்டுள்ள அரசாணை யில் கூறப்பட்டிருப்பதாவது:-

தகுதியுள்ள ரேசன் அட்டை தார ருக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கு வதற்கு அரசு உத்தரவிட்டுள் ளது. மக்களுக்கு பொருட்களை வழங்க  ரேசன் கடைகளில் உள்ள விற்பனை யாளர்கள், அலுவலக வேலை நேரத்தைத்  தாண்டியும், விடுமுறை நாளிலும் பணி யாற்றுகிறார்கள். மேலும், நிவாரணத் தொகையாக ஆயிரம் ரூபாயை ரேசன் அட்டைதாரர்க ளுக்கு வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவக்கூடிய சூழ்நிலையில் உயிரை பணயம் வைத்து அரசு உத்தரவை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள். இந்த சூழ்நிலையில் ரேசன் கடை விற்ப னையாளர்களையும், பாக்கெட் கட்டுகிற வர் களையும் ஊக்குவிப்பதற்காக, விற்ப னையாளர்களுக்கு ரூ.2,500-ம், பாக்கெட் கட்டுவோருக்கு ரூ.2 ஆயிரமும் சிறப்பு ஊக்கத் தொகை வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.