சென்னை,ஜூலை 6 அடுத்த 2 நாட்களில் கோவை, நீலகிரி ,தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் தென் மேற்கு பருவக்காற்று காரண மாக லேசானது முதல் மித மான மழை பெய்ய வாய்ப் புள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, கோவை மாவட் டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒரு சில இடங்க ளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, திரு வள்ளூர், காஞ்சிபுரம், சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், நாகப் பட்டினம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் மாவட்டங்க ளில் அடுத்த இரண்டு நாட்க ளுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்து டன் காணப்படும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.