tamilnadu

img

பாதிப்பை எதிர்கொள்ள போதுமான உதவிகளை செய்யவில்லை

கொரோனாவை விட கொடியது மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் சாடல்

சென்னை, ஏப்.24-  கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள மாநி லங்களுக்கு போதுமான உதவிகளை செய்ய முன்வராத மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப் பான்மை கொரோனாவை விட கொடியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாகச் சாடியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

தொழில் மந்தநிலை, கொரோனாவால் ஏற்பட்டுள்ள நோய் பாதிப்புகள் ஆகியவற்றை எதிர்கொள்ள மாநில அரசுகளே நேரடியாக செலவழிக்க வேண்டிய நிலையுள்ளது. இத்த கைய நிலையில் கூட மத்திய அரசு கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள மாநிலங்களுக்கு போதுமான உதவிகள் செய்ய முன்வரவில்லை. இதுவரையிலும் மத்திய அரசால் அறிவிக்கப் பட்ட நிவாரணங்கள் எந்த வகையிலும் தற்போ தைய இடர்பாடுகளை எதிர்கொள்ள உதவும் வகையில் அமையவில்லை.

இது ஒருபுறமிருக்க, மத்திய பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலங்களின் உரிமை களின் மீதும், நிதி ஆதாரங்களின் மீதும் மிகக் கடுமையான ஆக்கிரமிப்பை செய்து வந்திருக்கி றது. ஜிஎஸ்டி அமலான பிறகு மாநிலங்கள் தங்களது வருவாயைப் பெருக்கிக் கொள்ள மாநில அளவிலான எந்த வரி விதிப்புக்கும் மத்திய அரசின் அனுமதி பெறாமல் செய்ய முடி யாது. உற்பத்தி மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஏற்படும் இழப்பை 5 ஆண்டுகளுக்கு ஈடுகட்டுவோம் என கூறிய மத்திய அரசு  அதிலிருந்து தற்போது பின்வாங்கியிருக்கிறது.

மாநில அரசுகளின் நிதி  சுயேட்சைத்தன்மை செயல்பாடு தடுப்பு

மாநிலங்களின் உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்திற்கு மேல் கடன் வாங்க முடியாது என்ற நிர்ப்பந்தத்தால் மாநில மக்களுக்கு ஏதா வது ஒரு வகையில் உதவி செய்வதற்காக வெளி யில் கடன் வாங்குவதற்கும் இயலாத நிலை இருக்கிறது. மத்திய அரசு அனுமதிக்காமல் வெளிச்சந்தையில் கடன் திரட்ட முடிவு செய் தால் வட்டி விகிதம் 4.5 சதவீதத்திலிருந்து 9 சத வீதமாக இரட்டிப்பாக மாறிவிடும். இவையெல் லாம் இணைந்து மாநில அரசுகள் குறைந்த பட்ச அளவுக்காவது நிதி சுயேட்சைத்தன்மை யில் செயல்படுவதற்கான வாய்ப்புகளை தடுத் திருக்கிறது.

தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் அரிசி வழங்கும் நிலையில் கூட, முன்னுரிமை மற்றும் அந்தி யோதயா அட்டைதாரர்கள் தவிர பிறருக்கு வழங்கும் அரிசிக்கு பணம் பெற்றுக் கொண்டே மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்குகிறது. மத்திய அரசிடம் தேவைக்கு மேல் உபரியாக குவிந்து கிடக்கும் உணவு தானியங்களை ஊர டங்கு காலத்தில் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மத்திய அரசு செவி மடுக்க மறுத்து வருகிறது. கொரோனா பாதிப்புகளை எதிர்கொள்வதை விட மத்திய அரசின் இந்த மாற்றாந்தாய் போக்கை எதிர்கொள்வது மிகக் கடினமான பணியாக மாநிலங்களுக்கு மாறியிருக்கிறது.

தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டு இறுதியில் ஒட்டுமொத்த கடன் தொகை ரூ.4,56,661 கோடி யாக இருக்குமென தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள நிலைமைகளை எதிர்கொள்ள மாநில அர சாங்கம் மத்திய அரசிடம் ரூ. 9 ஆயிரம் கோடி நிதி கோரியுள்ளது. இந்த நிதியும் கூட முதன் முறையாக மார்ச் 21 அன்று ஊரடங்கு அறி விக்கப்பட்ட போது முன்வைக்கப்பட்ட கோரிக் கையாகும். கடன் திரட்டுவதற்கான ஒரு அனு மதியைத் தவிர வேறு எந்த வகையிலும் மத்திய அரசாங்கம் மாநில அரசுக்கு குறிப்பிடத்தக்க வகையில் உதவி செய்யவில்லை.

நிலுவைத் தொகையை  தர மறுக்கும் மோடி அரசு

மேலும், மத்திய அரசாங்கம் தமிழகத்திற்கு தர வேண்டிய கீழ்க்கண்ட வகையிலான நிலு வைத் தொகையை தராமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. உதாரணமாக, 2017-18ம் ஆண்டு முதல் மாநில அரசுக்கு வந்திருக்க வேண்டிய ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 4073 கோடி இன்று வரையிலும் தரப்படவில்லை. இதைப்போன்று 15-வது நிதிக்குழு பரிந்து ரைத்த வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.4025 கோடியை மத்திய அரசாங்கம் இதுவரை தரவில்லை. ஒரு சிறு தொகை மட்டுமே தரப்பட் டுள்ளது. ஒட்டுமொத்தமாக அனைத்து மாநி லங்களுக்கும் மத்திய அரசு தர வேண்டிய வரு வாய் பற்றாக்குறை ரூ. 74000 கோடி. ஆனால், மத்திய பட்ஜெட்டில் 30000 கோடி ரூபாய் மட் டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான செயல்பாடு

இதேபோன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் முடிக்கப் பட்ட பணிகளுக்கு மத்திய அரசாங்கம் 31.3. 2020 வரை தமிழகத்திற்கு தர வேண்டிய நிதி பாக்கி, சர்வசிக்ச அபியானுக்கு மத்திய அரசின் பங்கு, பிளஸ்-2 வகுப்பு தேர்ச்சிக்கு பிந்தைய எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை, கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் 25 சதவீதம் தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்ட மாண வர்களுக்கு தர வேண்டிய மத்திய அரசின் பங்கு என சில ஆயிரம் கோடிகளை மத்திய அரசு தமி ழகத்திற்கு பாக்கி வைத்துள்ளது. இந்த நிதி களை மத்திய அரசாங்கம் கொடுக்க காலதாம தம் செய்வது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதி ரானது. கடும் கண்டனத்துக்கு உரியது.

இத்தகைய கடுமையான நிதிச் சூழலிலும், நோய்ப்பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடு பட்டு கொண்டிருக்கும் மாநிலங்களுக்குத் தர வேண்டிய அனைத்து வகை நிதிகளையும் நிலு வையின்றி வழங்க வேண்டும். கொரோனா வை எதிர்கொள்வதற்கான சிறப்பு நிதிகளை மத்திய அரசு உடனடியாக தேவையான அள விற்கு வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலி யுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.