tamilnadu

img

வேலைவாய்ப்பைப் பறிக்கும் அரசாணை 56-ஐ ரத்து செய்க

வாலிபர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை, டிச. 7- வேலைவாய்ப்பைப் பறிக்கும் அர சாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் செங்கற்பட்டு மாவட்டம் சிங்க பெருமாள் கோயில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 8)  சிறப்பு மாநாட்டை நடத்துகிறது. இதுகுறித்து மாநிலத் தலைவர் ரெஜிஸ் குமார், செயலாளர் பாலா  ஆகியோர் சென்னையில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

இந்தியா சந்திக்கும் இரண்டு பெரும் பிரச்சனைகளில் கொடிய வறு மையும், பெருமளவு வேலையின்மை யும் ஒன்றோடொன்று தொடர்புடை யவை. வேலை என்கிற இந்திய இளை ஞர்களின் பெரும் கனவை அழித்து விட்டு, வளர்ச்சி என்று நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் மத்திய, மாநில ஆட்சியாளர்கள். வேலை என்பது சமூகத்திற்கும், தனி மனிதனுக்கும் பலனளிக்கக் கூடிய தாக இருக்க வேண்டும். வருமா னத்தை, உற்பத்தியை, அங்கீ காரத்தை அடிப்படையாகக் கொண்டி ருக்க வேண்டும். இந்த குறிப்பிட்ட அளவீடாக வைத்தால் இந்தியாவில் உள்ள பெரும்பகுதி மக்களுக்கு சமூகப் பாதுகாப்பான வேலை இல்லை. 

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி தனி யார்மயம், தாராளமய பொருளா தாரக் கொள்கையால் கடந்த 45 ஆண்டுக் காலத்தில் இல்லாத அளவிற்கு வேலையின்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விவசாய  நெருக்கடி, சிறு குறு தொழிற்சாலை கள் மூடல், மோட்டார் வாகன தொழிற்  சாலைகள், ஐடி நிறுவனங்கள் போன்ற பல துறைகளில் ஆயிரக் கணக்கானோர் வேலை இழந்து வருகின்றனர்.

6,500 காலிப் பணியிடங்களுக்கான குருப் 4 தேர்வுக்கு 16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதேபோல் கோவையில் 215 துப்புறவு காலிப் பணியிடங்களுக்கு 7 ஆயிரம் பேர்  விண்ணப்பித்துள்ளனர். இதில் அதி களவில் விண்ணப்பித்துள்ளவர்கள் பி.இ., எம்.இ., போன்ற உயர்கல்வி பயின்றவர்கள். இதிலிருந்தே வேலை யின்மையின் கொடுமை தெரிய வரும். சிறு குறுந் தொழிற்சாலைகள் நலி வடைந்ததால் 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாகச் சட்டமன்றத்தில் அமைச்சரே தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மட்டும் 85 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். அரசுத் துறை யில் மட்டும் 3 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிதாக 3 லட்சம் பணி யிடங்களை உருவாக்க முடியும்.  ஆனால் அரசு காலிப் பணியிடங் களை நிரப்பவும், புதிய வேலைவாய்ப்பு களை உருவாக்கவும் மறுக்கிறது. தமி ழக அரசுக்கு இளைஞர்களின் எதிர்  காலம் குறித்த அக்கறை இல்லை.  யாரையும் எப்போது வேண்டுமானா லும் வேலையிலிருந்து நீக்க முடியும்  வகையில் தொழிலாளர் நலச் சட்டங் களைப் பலவீனப்படுத்தி வருகிறது மத்திய அரசு.

குறைந்தபட்ச மாத ஊதியம் 20 ஆயி ரம் வழங்க வேண்டும், மத்திய, மாநில  அரசுத் துறைகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் வேலை நியமனத்  தடையை நீக்குவதுடன் காலியாக வுள்ள அனைத்துப் பணியிடங்களை யும் உடனே நிரப்ப வேண்டும். பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப கூடுதலான எண்ணிக்கையில் புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும், அரசுப் பணியிடங்களை ஒழிக்கும் வகையில் தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை 56ஐ உடனடியாக திரும்பப்பெறவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு தொழில் வளர்ச்சிக்காக மாநில சிறப்பு மாநாடு  செங்கற்பட்டு மாவட்டம் சிங்கபெரு மாள் கோவிலில் உள்ள கே.ஆர்.சி  திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக் கிழமை நடைபெறுகிறது. 

இந்த மாநாட்டில் மேனாள் துணைத் தலைவர் திட்டக்குழு (தமிழ்  நாடு அரசு) பேராசிரியர் நாகநாதன். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தர ராசன், மாநில துணைப் பொதுச் செய லாளர் எஸ்.கண்ணன், மாதர் சங்க  அகில இந்தியத் துணைத் தலைவர்  உ.வாசுகி, பொருளாதார அறிஞர் பேரா சிரியர் ஜெயரஞ்சன், வாலிபர் சங்க  அகில இந்தியத் தலைவர் பி.ஏ.முக மதுரியாஸ், மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்மார், செயலாளர் எஸ்.பாலா, பொருளாளர் தீபா உள்ளிட்ட பலர் உரையாற்றுகிறார்கள். இம்மாநாட்டில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களும், ஆட்டோ மொபைல், பொறியியல், தகவல் தொழில்நுட்பம், பனியன், பட்டாசு உள்ளிட்ட நிறுவனங்களில் வேலையிழந்த இளைஞர்களும் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.