tamilnadu

img

பிளஸ் 2 பொதுத்தேர்வில் முறைகேடு - 5 ஆசிரியர்கள் இடைநீக்கம்

நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க உதவிய 5 ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே மஞ்சூர் சாம்ராஜ் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 கணித தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க உதவிய 5 ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முதன்மை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், துறை அலுவலர் செந்தில் உள்ளிட்ட 5 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.