tamilnadu

img

உலிக்கல் பகுதியில் அதிகரித்து வரும் விதி மீறிய கட்டிடங்கள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

உதகை, மார்ச் 7- உலிக்கல் பகுதியில் விதியை மீறி கட் டப்பட்டு வரும் கட்டிடங்கள் விவகாரத்தில் அதிகாரிகள் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கட்டிடம், குடியி ருப்பு கட்ட உயர் நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில், நீரோடைகளை மறைத்து உயரமான அடுக் குமாடி கட்டிடங்கள் மற்றும் நிலச்சரிவு பகுதி யில் கட்டிடங்கள் கட்ட தடை விதித்துள் ளது. இந்நிலையில், குன்னூர் அடுத்த உலிக் கல் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் தேயிலை தோட்டங்களை அழித்து கட்டி டங்கள் கட்டுவது நாளுக்கு நாள் அதிகா ரித்து வருகிறது. மேலும், உலிக்கல் பஞ்சா யத்து அலுவலகம் அருகே விதிகளை மீறி உயரமான கட்டிடங்கள் அதிகளவில் கட்டப் பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி இது போன்ற காட்டேஜிக்கு செல்லக்கூடிய சுற்றுலா பயணிகளை கவருவதற்காக உயர மான பாலங்கள் தற்போது விதி மீறி கட்டப் பட்டுள்ளது.  இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், சாதாரண ஏழை, எளிய மக்கள் அத்துமீறி சிறிய அளவிலான ஒரு சுவர் அமைத்தாலே அதிகாரிகள் இடிக்கும் நடவ டிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், விதியை மீறி மிகப்பெரிய அளவில் பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஆகவே, விதியை மீறி கட்டிடங்கள் கட்டு வது தொடர்பாக அதிகாரிகள் பாரபட்ச மின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.