குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூரில் சுற்றுலா தலமான சிம்ஸ் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில்ஜனவரி முதல் வாரத்தில் கோடை சீசனுக்கு சுமார் 3.10 லட்சம் மலர் நாற்றுகள் மற்றும் விதைகள் நடவு செய்யப்பட்டன. தற்போது பூங்காவில் உள்ள மலர்கள் அனைத்தும் பூக்க துவங்கியுள்ளன.ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் வந்து செல்லும்நிலையில், தற்போது கொரோனா காரணமாக சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதால் பூங்கா பொலி விழந்து காணப்பட்டது. தற்போது தொடர்ந்துமழை பெய்து வருவதால் பூக்கள் அனைத்தும் அழுக துவங்கியுள்ளன.