tamilnadu

உதகை அரசு மருத்துவமனையில் வேருடன் சரிந்து விழுந்த ராட்சத மரம்

உதகை, ஆக. 11- உதகை அரசு தலைமை மருத்துவமனையில் இருந்த மிகப்பெரிய மரம் ஒன்று வேருடன் சாலை யில் விழந்தது. நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்க ளில் நிலச்சரிவு மற்றும் மரங்கள் வேருடன் சரிந்து விழுந்து வருகிறது. இந்நிலையில், ஞாயிறன்று நள்ளி ரவில் உதகையிலுள்ள மாவட்ட அரசு தலைமை மருது துவமனை வளாகத்தில் இருந்த கற்பூர மரம் ஒன்று வேருடன் சாய்ந்து கீழ்புறம் உள்ள சாலையில் விழுந் தது. இரவு நேரம் என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தீயணைப் புத்து துறையினர் வரவழைக்கப்பட்டு மரம் வெட்டி அகற்றப்பட்டது. மேலும், மருத்துவமனை வளாகத் தில் உள்ள மற்ற மரங்களை பாதுகாப்பாக வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.