tamilnadu

img

ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது

புதுதில்லி,ஏப்.11-  கொரோனா பரவல் தடுப்பு நட வடிக்கையின் அடுத்தக்கட்டமாக நாடு தழுவிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.   இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.   21 நாள் ஊரடங்கு வருகிற 14 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

இந்நிலையில் ஏப்ரல்  8 அன்று பிரதமர் மோடி நாடாளுமன்ற கட்சி தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.அப் போது, கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநில முதல்வர்கள் பிர தமரிடம் வலியுறுத்தினர்.   இதனை யடுத்து ஒடிசா, பஞ்சாப் ஆகிய மாநி லங்கள் முறையே ஏப்ரல் 30, மே 1  ஆம் தேதி வரை  ஊரடங்கை நீட்டித்துள்ளன. மகாராஷ்டிராவில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக சனிக் கிழமையன்று அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், பிரதமர் மோடி சனிக் கிழமையன்று காலை காணொலிக் காட்சி மூலம் மாநில முதல்வர்களுடன் மீண்டும்  ஆலோசனை நடத்தினார்.  அப்போது ஊரடங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க வேண் டும் என்று தமிழக முதலமைச்சர் எடப் பாடி பழனிசாமி கூறினார்.  ஊரடங்கை நாடு முழுவதும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று பல் வேறு மாநில முதல்வர்கள் வலியுறுத்தி யதாக பிரதமர் அலுவலக வட்டாரங் கள் தெரிவிக்கின்றன. 

அமைச்சரவைக்கூட்டம்

இந்த நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்த தமிழக அமைச்சர வையின் ஆலோசனைக் கூட்டம் சனிக் கிழமையன்று மாலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச் சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.  துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள் பங்கேற்றனர்.

பிரதமர் முடிவை  தமிழகம் ஏற்கும்

அமைச்சரவைக் கூட்ட முடிவுகள் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் செய்தியாளர் களிடம் கூறுகையில், இதுவரை 9,527 பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இன்னும் 485 பேரின் முடிவு கள் வரவேண்டியுள்ளது. ஈரோட்டில் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 பேராக அதிகரித்துள்ளது. கொரோனா தொற் றில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழக முதல்வர் பிரதமருடன் காணொலிக் காட்சியில் உரையாடினார். மருத்து வக்குழு வல்லுநர்களின் கருத்துக் களை கேட்டறிந்த முதல்வர், ஊர டங்கை இரண்டு வாரங்களுக்கு நீட் டிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண் டுள்ளார். மோடியிடம் பேசியதைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத் தில் பிரதமர் மோடி எத்தனை நாட்கள் ஊரடங்கு அறிவிக்கிறாரோ அதை ஏற்றுக்கொள்வது என முடிவு செய்யப் பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஊரடங்கை ஒவ்வொரு விதமாக செயல்படுத்துவதால் பலனில்லை. அத னால்தான் பிரதமர் அறிவிக்கும் நாடு தழுவிய முடிவை தமிழகம் ஏற்றுக் கொள்ளும். பிரதமரின் அறிவிப்பிற்குப் பின்னர் தமிழகத்தின் அடுத்தகட்ட நட வடிக்கைகள் தொடரும் என்றார்.

கிட்டத்தட்ட நான்கு லட்சம் ரேபிட் கிட்களுக்கு தமிழகம் ஆர்டர் வழங்கி யுள்ள நிலையில், பிசிஆர் டெஸ்ட் தான் கொரோனாவை உறுதிப்படுத் தும். ரேபிட் டெஸ்ட் முடிவு விரைவாகக் கிடைக்கும் அவ்வளவு தான் எனக் கூறி சமாளித்தார்.

அமெ.வுக்கு சென்ற  தமிழக ரேபிட் கிட் 

தமிழகத்தில் சனிக்கிழமை மாலை ஆறு மணி நிலவரப்படி 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 969 பேராக அறிவித்துள்ளது. இதனிடையே, ரேபிட் டெஸ்ட் கிட் இன்னும் தமிழகத்திற்கு வந்து சேர வில்லை. ரேபிட் கிட் அமெரிக்காவிற்கு திருப்பிவிடப்பட்டுவிட்டது. ரேபிட் டெஸ்ட் எடுத்தாலும் பிசிஆர் (Polymerase Chain Reaction) டெஸ்ட் தான் கொரோனா தொற்று உள்ளதை உறுதிப்படுத்தும். பிசிஆர் டெஸ்ட் கிட் 15 ஆயிரம் வரை இருப்பில் உள்ளது என்றும் சண்முகம் தெரிவித்தார்.