tamilnadu

தென்மேற்குப் பருவமழை இன்று தொடங்கும்?

திருவனந்தபுரம், ஜூன் 7- ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதி யில் அல்லது ஜூன் மாதத் தொடக்கத் தில் தென்மேற்குப் பருவமழை தொடங் கும். இந்த ஆண்டு பருவமழையின் தொடக்கம் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. இதன் காரணமாக, தென் னிந்திய மாநிலங்களில் கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. தமிழ கம் வடகிழக்குப் பருவமழையினால் அதிகளவில் மழை பெற்று வருகிறது.  இருந்தாலும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் அதனை யொட்டிய தமிழக எல்லையோரங்களில் தென்மேற்குப் பருவமழை அதிக மழைப் பொழிவைத் தந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது அரபிக் கடலில் குறைந்த அழுத்தப்பகுதி வரும் 9ஆம் தேதியன்று உருவாகவிருப்ப தாகத் தெரிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். இதன் தொ டர்ச்சியாக, சனி அல்லது ஞாயிறு முதல் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.