tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செதிகள்

பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு இந்த மாத இறுதிக்குள் வெளி யிடப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வி த்துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் மூலம் 4.30 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 5,400 கோடி வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரி வித்தார்.

தமிழகத்தில் 70 சதவீத மானியத்து டன், சூரிய சக்தி பம்புசெட்கள் திட்ட த்தில் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அமேசான், ஃபிளிப்கார்ட், ஸ்நாப்டீல் போன்ற இணைய வழி வர்த்தக நிறுவனங்கள் அவற்றி ன் வலைதளங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் பொருள்களில் அவை இறக்குமதி செய்யப்பட்ட நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும் என்று தில்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.

இந்தியாவில் முதலீடு செய்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் கொட்டி க் கிடப்பதாக, அமெரிக்க-இந்தியா வர்த்தக கவுன்சில் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலம் முழுவதும் ஜூலை 23 முதல் அடுத்த 14 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. 

தமிழகத்தில் நெல்லை உள்பட மேலும் 7 இடங்களில் பிளாஸ்மா  வங்கி தொடங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழகத்தில், பிளஸ்- 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவி களுக்கு, இன்று முதல் ஜூலை 30  ஆம் தேதி வரை, மதிப்பெண் பட்டியல் விநியோகிக்கப்படும் என அறி விக்கப்பட்டுள்ளது.மறுக்கூட்டலுக்கு ஜூலை 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என  அரசு தேர்வுகள் இயக்ககம் அறி வித்துள்ளது.