tamilnadu

img

கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ள பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவாக திவால் சட்டத்தை வளைப்பதா?

நாடாளுமன்ற செய்திகள்

டி.கே.ரங்கராஜன் எம்.பி., எதிர்ப்பு

புதுதில்லி, மார்ச் 6 - திவால் விதிகள் சட்டம் 2016ல் மத்திய அரசு புதி தாக கொண்டுவந்துள்ள திருத்தம் ரியல்எஸ்டேட் துறையில் ஈடுபட்டுள்ள பெரும் கார்ப்பரேட்டுகள் சட்டத்தை ஏமாற்றுவதற்கும், கொள்ளை லாபம் அடிப்ப தற்குமே உதவி செய்யும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலங்க ளவைத் தலைவரும் மத்திய நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அமைச்சகத்தின் நிலைக்குழு உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் கூறியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள திவால் விதிகள் சட்டம் 2016 திருத்த மசோதா தொடர்பாக, மத்திய நிதி அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு வின் தலைவருக்கு டி.கே. ரங்கராஜன் அனுப்பியுள்ள எதிர்ப்பு கடிதத்தில் மேற் கண்டவாறு குறிப்பிட்டுள் ளார்.

திவால் விதிகள் சட்டம் 2016ல் திருத்தம் செய்வது என்ற பெயரில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விதிகள், ஒரு மிகப்பெரிய வீடு கட்டும் திட்டத்தில் குறைந்த பட்சம் நூறு வீடு களை வாங்குபவர்கள் அல்லது மொத்தத்தில் 10 சதவீதம் வீடு வாங்குவோர் உரிய நிதியை தராவிட்டால், சம்பந்தப்பட்ட கட்டுமா னத்தை மேற்கொள்ளும் நிறுவனம் இப்பிரச்சனை தொடர்பாக திவால் நோட் டீஸ் அளிக்க வகை செய்கின் றன. வீடு வாங்கும் தனிநபர் ஒருவரோ அல்லது அவரு க்கு நிதி உதவி செய்யும் நிறுவனமோ இந்தப் புதிய விதிகளின் பிரிவு 7ன்படி திவால் நோட்டீஸ் எதுவும் விண்ணப்பிக்க முடியாது. வீடு வாங்குவோருக்கு உரிய உரிமைகளை இந்த விதி களின் அடிப்படை கோட்பாடு கள் மறுக்கின்றன. மாறாக வீடுகளை விற்கும் கார்ப்ப ரேட்களுக்கு உதவும் விதத் தில் இந்த புதிய திருத்தமா னது கொண்டுவரப்படுகிறது. இது, மிகக்கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி திவாலா கும் ஒருவர் நிவாரணம் பெறு வதற்கு வழி செய்யும் அடிப்ப டைக் கோட்பாட்டிற்கு நேர் எதிரானதாகும் என்று டி.கே. ரங்கராஜன் குறிப்பிட்டுள் ளார்.

இந்த புதிய திருத்தமா னது, தங்களுக்கு பொருந் தாத விதியை முற்றிலும் மாற்றி தங்களுக்கு ஏற்ற வாறு சட்டத்தை வளைக்கிற  - கட்டுமானத் துறையில் ஈடு பட்டுள்ள பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வலுவான கொள்ளைக்காக முன்மொழி யப்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது. இதன்மூலம் கட்டுமானத்துறையில் ஈடு பட்டுள்ள பெரும் நிறுவ னங்கள் வங்கிகளை ஏமாற்று வதற்கு இட்டுச்செல்லும் என்றும் ஏற்கெனவே அவர்கள் வங்கிகளின் தணிக் கைகளிலிருந்தும், ரியல் எஸ்டேட் ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி சட்டம் 2016 கூறியுள்ள விதிகளிலி ருந்தும் தப்பித்து வருகி றார்கள் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிக ளில் தங்களது சேமிப்பின் மூலம் வீடு வாங்கும் எளிய, நடுத்தர குடும்பங்கள், மிக அதிகமான பணத்தை செலுத் தும் அளவிற்கு நிலைமைகள் மோசமாக்கப்பட்டிருக்கின் றன; ஒட்டுமொத்தமாக உரு வாக்கப்பட்டுள்ள கட்டு மான சூழலில் அவர்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட வர்களாக இருக்கிறார்கள். இதற்கு, கட்டுமானத்துறை யில் ஈடுபட்டுள்ள பெரும் நிறுவனங்கள் முறையற்ற விதத்தில் நிதி மேலாண்மை செய்வதுதான் காரணம் என்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இந்நிலை யில் வீடு வாங்குவோரின் அடிப்படை உரிமைகளை யும் அவர்கள் பறிக்க முயற்சிக்கிறார்கள். இந்தச் சூழ்ச்சியில் அரசாங்கமும் சட்டப்பூர்வமாக பங்கேற்ப தற்கு இந்தச் சட்டத்திருத்தம் வழிகோலும் என்றும் டி.கே. ரங்கராஜன், நிதித்துறைக் கான அமைச்சகம் நாடாளு மன்ற நிலைக்குழுவின் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தமது எதிர்ப்பி னை பதிவு செய்திருக்கிறார்.