tamilnadu

img

சிறை வைக்கப்பட்ட காஷ்மீர் தலைவர்கள்

உமர் அப்துல்லா, மெகபூபா, தாரிகாமிக்கு நள்ளிரவில் வீட்டுச் சிறை

ஸ்ரீநகர், ஆக.5- அரசியல் சாசன பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு, காஷ்மீர் மூன்றாக பிரிக்கப் படும் என்று சில நாட்களாக தகவல் நிலவிய நிலையில், ஆகஸ்ட் 4 நள்ளிரவு 12 மணி  முதல் காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.  ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவர் உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சி யின் தலைவர் மெகபூபா முப்தி, காங்கிரஸ் தலைவர் உஸ்மான் மஜித், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைவர் முகமது யூசுப் தாரிகாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கபட்டுள்ளனர். மேலும், ஸ்ரீநகரில் 144 தடை உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை மக்கள் நடமாட்டம் இருக்கக் கூடாது. கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு

ஜம்மு-காஷ்மீர் முழுவதும் சுமார் 38,000 பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட் டுள்ளனர். பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ள தாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள் துறை அமைச்சகம் தெரி வித்துள்ளது.  இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தி, உச்சக்கட்ட உஷார் நிலையை அமல்படுத்தும்படி அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள், டிஜிபி.க்கள், தில்லி காவல் ஆணையருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாதுகாப்பு படைகள் மற்றும் சட்டம் - ஒழுங்கு அமைப்புக்களை பயன்படுத்தி, அனைத்து மாநிலங்களிலும் உஷார் நிலையை அமல்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அமைதி நிலவ சிறப்பு கவனம் எடுத்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக காஷ்மீரில் உள்ள வீடுகள், பல்வேறு மாநிலங்களில் இருந்து காஷ்மீ ருக்கு படிக்க வந்திருக்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளியூர் பத்திரிகையாளர்களுக்கு தடை

காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பாதுகாப்பு காரணங்க ளுக்காக வெளியூர் பத்திரிகையாளர்கள் காஷ்மீருக்குள் வர வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இணையவசதி மற்றும் செல்போன் சேவைகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன.  லடாக் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. அங்கு வழக்கம்போல் பள்ளி-கல்லூரிகள் இயங்கி வருவதாக ஏ.என்.ஐ ஊடகம் தெரிவித்துள்ளது.