திக்லிபூர்
நாட்டின் பல்வேறு பகுதியில் கடந்த சில நாட்களாக லேசான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. வடகிழக்கு மாநிலங்களும் நிலநடுக்கதிற்கு தப்பவில்லை.
இந்நிலையில், இந்திய யூனியன் பிரதேச ஆட்சி பகுதியான அந்தமான்&நீக்கோபார் பகுதி பல தீவு கூட்டங்களை உடையது. இந்த பகுதியின் திக்லிபூரில் இன்று காலை நிலநடுக்கம் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மிதமான நிலநடுக்கத்தால் உயிர் மாற்று பொருட்சேதம் தொடர்பாக திடமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த விவரங்களை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.