புதுதில்லி, ஏப்.15- இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 11,933 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 392 ஆக அதிகரித்துள்ளது. குணம டைந்தோரின் எண்ணிக்கை 1,344 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரத்தில் அதிகபட்ச மாக 2,687 போ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். உயிரிழப்பும் அந்த மாநிலத்தில்தான் மிக அதிக மாக 178 ஆக உள்ளது.
கொரோனா நோய்த்தொற்று அதி கம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட் டியலில் தில்லி இரண்டாமிடத்திலும் தமிழகம் மூன்றாம் இடத்திலும் உள் ளது. தமிழகத்தில் இதுவரை 1242 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உயி ரிழப்பு 14 ஆக அதிகரித்துள்ளது. தில்லியில் 1,561 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்ட றியப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 30 பேர் உயிரிழந்துவிட்டனா். குஜ ராத் மாநிலத்தில் 695 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். 30 பேர் உயிரிழந்துள்ள னர். மத்தியப் பிரதேசத்தில் 987 பேர் பாதிக்கப்பட்டுள்ளளனர். 53 பேர் உயி ரிழந்துள்ளனர், பஞ்சாபில் 186 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.13 பேர் உயிரி ழந்துவிட்டனா்.
தெலுங்கானாவில் 647 பேருக் கும், ஆந்திராவில் 503 பேருக்கும், ராஜஸ்தானில் 1,005 பேருக்கும், உத்த ரப்பிரதேசத்தில் 735 பேருக்கும், கேர ளத்தில் 387 பேருக்கும், குஜராத்தில் 695 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 1,344 பேர் கரோனாவில் இருந்து மீண்டு, வீடு திரும்பியுள்ளனர். 392 பேர் உயிரி ழந்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் தான் கொரோனா நோய்த்தொற்று குறைவாக உள்ளது. அங்கு மணிப்பூ ரில் இருவருக்கும், அருணாசலப் பிர தேசம், திரிபுரா, மிஜோரம் ஆகிய மாநி லங்களில் ஒருவர் அல்லது இருவ ருக்கு மட்டுமே கொரேனா உறுதி யாகியுள்ளது. மேகாலயத்தில் செவ்வாயன்று ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரோ நோய்க்கு அஞ்சி ஷில்லாங்கில் உள்ள பெத்தானி மருத்துவமனை யின் ஜன்னலிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.