74ஆவது சுதந்திரதின விழா புதுச்சேரி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (ஆக. 15) கொண்டாடப்பட்டது. முதல்வர் நாராயணசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் பல்வேறு துறைகளில் சேவையாற்றிய அதிகாரிகளுக்கு சான்றிதழ்களையும் விருதுகளையும் வழங்கி பாராட்டினார்.