tamilnadu

img

தில்லியில் தீவிரமடையும்  காற்று மாசு: பள்ளிகளுக்கு விடுமுறை

தலைநகர் தில்லியில் அதிகரித்துவரும் காற்று மாசுபாடு காரணமாக நவம்பர் 5 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
தலைநகர் தில்லியில் தீபாவளி பண்டிகை முடிவடைந்ததைத்தொடர்ந்து காற்று மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தில்லி மக்கள் கடும் உடல் நலம் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இதைத்தொடர்ந்து கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் வரும் நவம்பர் 5ம் தேதிவரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.