tamilnadu

தில்லியில் காற்று மாசு சற்று குறைந்தது

புதுதில்லி,நவ.24- தலைநகர் தில்லியில் ஞாயிறன்று காற்று மாசு சற்று குறைந்தது. தில்லியில் கடந்த இரு மாதங்களாக காற்று மாசின் அளவு மிக மோசமான நிலையில் உள்ளது. காற்றின் தரம்  கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ தகுதியற்ற இடமாக மாறிவிடும் அளவிற்கு  படு அபாயத்திற்கு சென்றது.  இதனையடுத்து நிலைமையை சீராக்க தில்லி அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது . வாகனங்களை இயக்குவதில் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தவிர கல் குவாரிகளை இயக்கவும், இயற்கை எரிவாயு அல்லாமல், நிலக்கரி போன்ற எரிபொருட்களில் இயங்கும் தொழிற்சாலைகளுக்கு அவ்வப்போது தடை விதிக்கப்பட்டு வருகிறது. காற்று மாசு உயர்ந்திருந்த நிலையில், ஞாயிறன்று சூழல் சற்று மாற்றம் அடைந்துள்ளது.  இந்தியா கேட், சாந்தினி சவுக் உள்ளிட்ட பகுதிகளில் காற்று மாசு அளவு சராசரியாக 239ஆக பதிவாகியுள்ளது. வரும் நாட்களில் காற்று சாதகமாக வீசும் என்பதால், தலைநகரை உலுக்கும் காற்று மாசு மேலும் குறைய வாய்ப்பிருப்பதாக, மத்திய காற்றுத்தரம் மற்றும் தட்பவெப்ப ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.