tamilnadu

img

தொடர்ந்து பணி வழங்க கோரி கொசு ஒழிப்பு பணியாளர்கள் மனு

நாமக்கல், ஜூன் 10- தொடர்ந்து பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கொசு ஒழிப்பு பணியாளர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியமிடம் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொசு  ஒழிப்பு பணியாளர்கள் கடந்த 10 ஆண்டு களாக மிகக் குறைந்த கூலிக்கு அனைத்து கிராமங்களில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு மற்றும் கொசு ஒழிப்பு பணியையும் செய்து  வருகின்றனர். ஊராட்சி ஒன்றியத்துக்கு  20 நபர்கள் வீதம் பணியாற்றி வரு கின்றனர். சுமார் 25 கிலோ மீட்டர்  சென்று இப்பணிகளை தொழிலாளர் கள் மேற்கொண்டு வருகின்றனர். இவர் களுக்கு தினசரி ரூ.50 வரை போக்குவரத்து செலவுகள் ஏற்படுகிறது.  இன்றைய விலை வாசி உயர்வில் இவர்களது குடும் பத்தை நடத்த தற்போதைய குறைந்த பட்ச கூலியில் செயல்படுவது மிகவும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. ஆகவே, குறைந்தபட்ச கூலி ரூ.500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். வேலை பார்க்கும் பழைய ஊழியர்களை நிறுத்தி விட்டு புதிய பணியாளர்களை நியமனம் செய்யக்கூடாது. பொதுமக்களுக்கு நல்ல சேவையை செய்து வரும் இந்த கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு தொடர்ந்து பணி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று சிஐடியு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட் சித்துறை ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு கொசு ஒழிப்பு களப் பணியாளர் சங்கம் சார்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியமிடம் மனு அளித்தனர். இதில், சங்கத்தின் மாநில துணை தலைவர் மெய்யழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.