tamilnadu

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் கைது

நாகர்கோவில், ஜூலை 30- சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை இழைத்ததாக கூறப்படும் புகாரின் பேரில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்டார். குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த கோட்டார் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த சில தினங் களுக்கு முன் தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இது தொடர் பாக பெற்றோர் கோட்டார் காவல் நிலை யத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை செய்து அந்த வாலிபரிடம் இருந்து சிறுமியை மீட்டனர். இது தொடர்பாக குழந்தைகள் நல குழு அதிகாரிகளிடம் சிறுமியை ஆஜர்படுத்தினர். அங்கு அந்த சிறுமி கடந்த 2017ம் ஆண்டு முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முரு கேசன் உட்பட சிலர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும் இதற்கு அந்த சிறுமியின் தாய் உடந்தையாக இருந்ததாகவும் வாக்குமூலம் அளித் துள்ளார்.

இதுகுறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாஞ்சில் முருகேசன் உட்பட 5 பேர் மீது காவல் துறையினர் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். மேலும் தலைமறைவாக இருந்த நாஞ்சில் முருகேசனை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து தேடி வந்த னர். இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசனை தனிப்படை காவல் துறையினர் நெல்லை மாவட்டம் உவரியில் வைத்து கைது செய்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்து வந்தனர். இதை தொடர்ந்து மருத்துவ பரிசோத னைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரிக்கு காவல் துறையினர் அழைத்து சென்றனர்.  ஏற்கனவே இவ்வழக்கில் சிறுமியின் தாய் உள்பட, குளத்தூரை சேர்ந்த பாலு (66), கோட்டார் கம்பளத்தை சேர்ந்த அசோக்குமார் (43) மற்றும் கார்த்திக் (23) ஆகிய 4 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் வழக் கின் முதல் எதிரியான முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.