tamilnadu

திருப்பூண்டியில் 20 மூட்டைகள் அரிசி வழங்கிய தமுஎகச

நாகப்பட்டினம், ஜூலை 12- நாகை மாவட்டம்,திருப்பூண்டியில் கொ ரோனா வைரஸ் தொற்று பரவலால், அங்கு ள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு  வங்கி வெள்ளிக்கிழமை மூடப்பட்டு வெளி யில் உள்ள கேட்டில், ‘திருப்பூண்டியில் கொ ரோனா பரவலால் அலுவலகம் செயல்படாது, யாரும் இங்கு வரவேண்டாம்’ என்ற அறி விப்பு அட்டை தொங்க விடப்பட்டது. திருப்பூண்டியில் கொரோனா வைரஸ் பர வலுக்கு இடையே, ஊரடங்கால் பாதிக்க ப்பட்ட நலிந்த மக்களுக்கு அளிப்பதற்காக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலை ஞர்கள் சங்கம், கீழையூர் கிளையின் சார்பில்  நன்கொடையாளர்கள் மூலமாக சேகரித்து வைத்திருந்த 20 மூட்டைகள் கொண்ட அரிசியை, 20 குடும்பங்களுக்கு அவரவர் வீடு களுக்குச் சென்று வழங்கினர். இந்நிகழ்வில் தமுஎகச மாவட்டக்குழு உறுப்பினர் ஆதி.உதயகுமார், கிளைத் தலை வர் சிவநேசன், கிளைச் செயலாளர் சி.பி.செல்வம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.